இன்று காலை யாழ் வடமராட்சிக கிழக்கு மணல் காட்டில் பதட்டம், பெருமளவு மக்கள் கூடியதால் ராணுவம் குவிப்பு
யாழ் வடமராட்சி கிழக்கு மணல்காட்டுக்கு பகுதியில் இன்று காலை தனியார் ஒருவர் ஊடாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் அந்த முயற்சியை எதிர்த்து அப்பகுதியில் பெருமளவு மக்கள் கூடியதால் இராணுவமும் பொலிசாரும் குவிக்கப்பட்டு பதட்டமான நிலை ஏற்பட்டது. அரசாங்கத்தினல் தனியார் ஒருவருக்கு குறிப்பிட்ட பகுதியில் மணல் அகழ்வு மேற்கொள்வதற்கு பிரத்தியேக அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர் மண்ணகழ்வு மேற்கொள்வதை எதிர்த்தே ஊர் மக்கள் ஒன்று கூடினர்.
இதன் பின்புலத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள அரசியல்வாதி ஒருவர் உள்ளதாக ஊர் மக்கள் குற்றம் சாட்டினார்கள்