Sun. May 19th, 2024

புலோலியில் கத்தி வெட்டு இளைஞர் படுகாயம்

பருத்தித்துறை வராத்துப்பளை பகுதியில் இடம்பெற்ற கத்திவெட்டில்  விரல் துண்டிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கடந்த திங்கட்கிழமை 3 இரவு புலோலி வராத்துப்பளைப் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் தும்பளை பகுதியைச் சேர்ந்த யோகானந்தம் ஜெயராஜ் வயது 35 என்ற இளைஞர் படுகாயம் அடைந்தார். வராத்துப்பளைபகுதியில் இவர் நின்றிருந்த வேளை இவர் மீது கத்தி வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டத்தில்  அவருடைய விரல் துண்டிக்கப்பட்டு அவ்விடத்தில் விரல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்