புற்தரையிலான துடுப்பாட்ட நிலையம் அங்குரார்ப்பணம்
புற்தரையிலான துடுப்பாட்ட பயிற்சி நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப வேலைகள் அரியாலை சனசமூக நிலையத்தில் புன்கன்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரியாலை லண்டன் வாழ் உறவுகளினால் இதற்கான நிதி பங்களிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரியாலை சன சமூக நிலையத்தினர் கருத்துத் தெரிவிக்கையில் அரியாலை இளைஞர்கள் இவ்வாறான புற்தரை மைதானத்தில் பயிற்சிகளை பெற்று தேசிய அணியில் இலகுவாக இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனை நடைமுறைப்படுத்த உள்ளோம். இன்னும் 3 மாதத்தில் குறித்த மைதானமானது எமது கிராம சிறார்களின் பாவனைக்கும் யாழ் மாவட்ட புற்தரையில் விளையாட விரும்பும் இளைஞர்களுக்கும் பாவனைக்கு வரவுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.