Fri. May 17th, 2024

புரட்சிகரமான மாற்றத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து மேற்கொள்ளவேன் -சஜித் சூளுரை

1993 இல் எனது தந்தை ரணசிங்க பிரேமதாச உயிரிழந்த பின்னர் அந்த பொறுப்பை ஐக்கிய தேசிய கட்சி 2019 இல் எனக்கு வழங்கி இருக்கின்றது. இந்த பொறுப்பை எனது உயிருக்கும் மேலாக கருதி நிறைவேற்ற பாடுபடுவேன்.எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் விட்டுக்கொடுப்பும் பொறுமையுமே காரணமாகும். அவரின் இந்த தியாகத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். அதேபோல் சபாநாயகர் கருஜெயசூரியவின் தியாகத்தையும் மறக்கமாட்டேன் என்று உணர்ச்சி ததும்ப தெரிவித்தார் .
ஐக்கிய தேசிய கட்சியின் கட்சி 73 ஆம் ஆண்டு நிறைவு கூட்டம் மற்றும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் விசேட கூட்டம் இன்று சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்

மேலும் தெரிவித்த அவர் நாட்டுக்கு பொருத்தமில்லாத, பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒப்பந்தத்திலும் நானோ ஐக்கிய தேசிய கட்சியோ கைச்சாத்திடப்போவதில்லை என்றும் கூறினார்

எமது அரசாங்கத்தில் குடும்ப ஆட்சியை ஏற்பட இடமளிக்கமாட்டேன். எனது தந்தையின் வழியிலே எனது பயணத்தை மேற்கொள்வேன் என்றும் அவர் கூறினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்