Fri. May 17th, 2024

புதுக்குடியிருப்பு பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் உள்ள சுதந்திரபுரம் பகுதியில் இன்று (29) வீட்டு உரிமையாளர் ஒருவர் தனது நிலத்தினை உழவு செய்யும் போது ஒரு தொகுதி வெடிபொருட்கள் நிலத்தில் வெளிவந்துள்ளன

சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு வீட்டின் உரிமையாளரால் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த இடத்தில் அடையாளம் காணப்பட்ட 8 கிளைமோர் குண்டுகளையும் 60 டிடேனட்டர்களையும் அந்த நிலப்பகுதியில் கண்டு அடையாளப்படுத்தியுள்ளார்கள்

இதனை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிப்பொருட்கள் கடந்த கால போரின் போது புதைக்கப்பட்ட தொகுதி வெடிபொருட்கள் என பொலிஸார் தெரிவித்தனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்