Fri. May 17th, 2024

சட்டமா அதிபர் வழங்கிய உறுதி மொழியை அடுத்து பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள்

கடந்த பல நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் முன்னெடுது வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சட்டதரணி எஸ்.கெங்காதரன் இதனை ஊடங்கங்களுக்கு தெரிவித்தார். முல்லைத்தீவு பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த தேரரின் உடலை நீதிமன்றின் உத்தரவை மீறி தகனம் செய்து நீதிமன்றை அவமதித்தமை மற்றும் சட்டதரணிகள் தாக்கப்பட்டமையை ஆகியவற்றை கண்டித்து கடந்த 23 ஆம் திகதி முதல் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சட்டமா அதிபர் வழங்கிய உறுதி மொழியை அடுத்து இந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சட்டத்தரணி எஸ்.கெங்காதரன் தெரிவித்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்