புகைரதம் மோதியதில் 4 மாடுகள் உயிாிழப்பு!
மன்னாா்- மதவாச்சி இடையில் இளைமாளத்தாழ்வு பகுதியில் புகைரதத்துடன் மோதி 4 மாடுகள் உயிாிழந்துள்ளன.
குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 8.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தலைமன்னார் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணியளவில் குறித்த ரயில் பயணித்துள்ளது.
இதன் போதே மன்னார்-மதவாச்சி பகுதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. விபத்தை தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் பயணிகளுடன் மதவாச்சி நோக்கிசென்றது.
தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் ரயிலில் தொடர்ச்சியாக மாடுகள் மோதி உயிரிழக்கும் சம்பவம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.