Tue. May 14th, 2024

புகைரதம் மோதியதில் 4 மாடுகள் உயிாிழப்பு!

மன்னாா்- மதவாச்சி இடையில் இளைமாளத்தாழ்வு பகுதியில் புகைரதத்துடன் மோதி 4 மாடுகள் உயிாிழந்துள்ளன.

 

குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 8.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தலைமன்னார் ரயில் நிலையத்தில் இருந்து இன்று  காலை 7.10 மணியளவில் குறித்த ரயில் பயணித்துள்ளது.

இதன் போதே மன்னார்-மதவாச்சி பகுதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. விபத்தை தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் பயணிகளுடன் மதவாச்சி நோக்கிசென்றது.

 

 

தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் ரயிலில் தொடர்ச்சியாக மாடுகள் மோதி உயிரிழக்கும் சம்பவம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்