Sun. May 19th, 2024

பிரதேச சபை வீதிகளுக்கு அடிக்கல் நாட்ட பிரதேச சபை அனுமதி தேவை

17.12.2020 இன்று நடைபெற்ற வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை கூட்டத்தில் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிய வீதிகள் அமைப்பதற்கான அடிக்கல் நடுவதாயின் பிரதேச சபையின் அனுமதி பெற்று செய்யவேண்டுமென தவிசாளர் இன்று பிரதேச சபை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.  அதற்கான அனுமதி மேலிடத்திலிருந்து தமக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபை உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.  இன்று நடைபெற்ற அமர்வில் பிரதேசசபை உறுப்பினர்கள் பிரதேச சபையினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் முடிவடையவில்லை என விசனம் தெரிவித்தார்கள். அதே நேரத்தில் வீதிகள் உரிய கால்வாய்கள் அமைக்கப்படாமல் அமைக்கப்பட்டு வருவதால் மழைநீர் பாயமுடியாமல் தோட்டங்கள் அழிவடைந்து வருவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்