Fri. May 17th, 2024

பாடசாலையில் இல்ல மெய்வன்மை போட்டி ஆரம்பிப்பது தொடர்பாக ஆராய்வு

பாடசாலை மட்ட இல்ல மெய்வன்மை போட்டிகளை ஆரம்பிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.  தனிமைப்படுத்தப்பட்ட மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பாடசாலை மட்ட இல்ல மெய்வன்மை போட்டிகளை நடாத்துவது குறித்து ஆராயப்பட்டது. இன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ் உட்பட பலரும் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். வைரஸ் தாக்கம் உள்ள இடத்தில் விளையாட்டு தவிர்க்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று உள்ள மாணவர்கள் ஒரு போதும் விளையாட்டு போட்டிகளுக்கு உட்படுத்தக் கூடாது எனவும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடாத்தப்படுவதோடு விளையாட்டு போட்டிகளை முறையாக ஆரம்பிப்தற்குரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் கலந்துரையாடினார். அத்தோடு கிரிக்கெட் பிக் போட்டிகள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்