Sun. May 19th, 2024

பாடசாலையால் நடாத்தும் zoom வகுப்புக்கான நேரத்தை வரையறுக்கவும்

பாடசாலை இணையவழி கற்கை வகுப்புக்களை பிற்பகல் 2 மணிவரை நடாத்துமாறு தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்து வருவது எல்லோரும் அறிந்ததே.  இதனால் மாணவர்கள் இழந்த கல்வியை மீளப் பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்ப்படாலே இது சாத்தியமாகும்.
இணையவழி வகுப்புக்கள் இலவசமாகவும் சிலர் பணத்தை பெற்றும் வகுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பாடசாலையில் நடைபெறும் இணையவழி கற்பித்தலை காலை முதல் பிற்பகல் 2 மணிவரை நடாத்துமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர்,  வடமாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்கள் கவனமெடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்