Fri. May 17th, 2024

பஸ்களுக்கு தொற்று நீக்கும் நடவடிக்கை

பருத்தித்துறையில் இருந்து தமது சேவையை மேற்கொள்ளும் அனைத்து தனியார் பஸ்களும் தொற்று நீக்கம் செய்யப்பட்டு தமது சேவையை மேற்கொண்டு வருகின்றனர்.  பருத்தித்துறை நகர சபையினரால் கொவிட் 19 தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதனையடுத்து பருத்தித்துறையில் இருந்து புறப்படும் அனைத்து தனியார் பஸ்களும் தொற்று நீக்கம் செய்யப்பட்ட பற்றுச் சீட்டை பெற்றுக் கொண்ட பின்னரே தமது சேவையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்