Fri. May 17th, 2024

பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மன்னிப்புக் கோரியுள்ளது.

யாழ்பல்கலைகழகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இறந்தோர் நினைவுச்சின்னம் அகற்றப்பட்டமைக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எமது பல்கலைக் கழகத்தில் நேற்று முன்தினம்  இடம்பெற்ற இறந்தோர் நினைவுச்சின்னம் அகற்றப்பட்டமை அதிர்ச்சி தரும் விடயம் என யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ள உணர்வலைகளை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம். சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றுவதற்கு விடுக்கப்பட்ட பணிப்புரை வெளிப்படையான முறையில் பரவலான கலந்தாலோசனை மூலம் அணுகப்பட்டிருக்க வேண்டும் என நாம் கருதுகிறோம்.  இந்தப் பணிப்புரை தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு துணைவேந்தரால் பணிக்கப்பட்டவர்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளனர்.
அன்றைய இரவில் பல்கலைக் கழகத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பாக எமது அங்கத்துவத்தை சார்ந்தவர்கள் எவராவது மனிதநேய உணர்வாளர்களை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் நாம் மக்களிடம் மன்னிப்புக் கோரவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
பல்கலைக் கழகமானது சமூகத்துடன் இணைந்து இயங்க வேண்டியது அவசியமாகும். நாம் சமூகத்தை புறம்தள்ளி மமதையுடன் செயல்பட முடியாது. இது தொடர்பில் நாளை (11.01.2021) வடக்கு கிழக்கு தழுவிய நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பூரண வழமை மறுப்பிற்கு எமது பரிபூரண ஆதரவையும் வழங்குகின்றோம். எனினும் பல்கலைக் கழகத்தில்  பரீட்சை கடமைகளிலும், அதனுடன் இணைந்த கடமைகளிலும் ஈடுபடும் ஊழியர்களை பரீட்சைகள் இடம்பெறுமாயின் அதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்