பல்கலைக்கழகங்கள் மீள ஆரம்பிப்பது ஒத்திவைப்பு
நாட்டில் பல்கலைக்கழகங்களின் கற்கைகளை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது ஒத்திவைக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களின் கற்கை நடவடிக்கைகள் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது. எனினும் சுகாதாரத் துறையின் ஆலோசனையின்படி பாதுகாப்பான சூழல் ஏற்படும்வரை பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.