Sun. May 19th, 2024

பருத்தித்துறை உபதவிசாளரை குறைகூறும் தமிழரசு கட்சி முன்னாள் வேட்பாளர்

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பொலிகண்டி வட்டாரத்தில் பருத்தித்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் தினேஷும்  ஆ.முல்லைதிவ்யனும் போட்டியிட்ட நிலையில்  தினேஷ் வெற்றி பெற்று இருந்தார். தேர்தல் முடிந்த நிலையில்   தனது பதவிக்காலத்தில் இரண்டு வருடங்களை  வேட்பாளர் ஆ.முல்லைதிவ்யனுக்கு வழங்குவதாக தினேஷ் உறுதியளித்திருந்தார்.அதற்கமய கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தனது பதவி விலகல் கடித்த்தை தமிழரசு கட்சி செயலாளருக்கு அனுப்பிவிட்டதாக சொல்கின்றார்.ஆனால் செயலாரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தனக்கு கடிதம் கிடைக்கவில்லை என்று சொல்கின்றார்.இவ் விடையம் சம்மந்தமாக கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கவலையுடன் தெரிவித்தார்  ஆ.முல்லைதிவ்யன்.தனக்கும் தனக்கு வாக்களித்த மக்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்வதாகவும் கவலையுடன் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த நிலையில் உபதவிசாளர் தினேஷுடன் எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு இந்த விடயம் குறித்து கேட்டபொழுது,  தான் முல்லை திவ்யனை விட அதிக மக்கள் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டதாகவும்,  கட்சி விரும்பினால் என்னை நிப்பாட்டலாம்  என்றும்,  தான் அவ்வாறு கடிதம் அனுப்ப போவதில்லை என்றும் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்