பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் மருந்து வழங்கும் பிரிவில் ஆண் ஊழியர் மீது பெண் ஊழியர் தாக்குதல்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மருதந்து வழங்கும் பிரிவில் ஊழியர்களுக்கிடையில் மோதல் (02.12.2019) நோயாளர்கள் மருந்து பெறுவதற்காக நீண்ட நேரம் வரிசையாக காத்திருந்த போது மணிக்கணக்கில் ஊழியர்களுக்கிடையில் மோதல் நடைபெற்றது இதை பார்த்துக்கொண்டு நின்ற நோயாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஆத்துடன் சிறுவர்கள் பயத்தில் விறுட்டு அழுதனர் கைகுழந்தைகளுடன் தாய்மார் நீண்டநேரம் பெரும் சிரமப்பட்டனர் இது தொடர்பாக விசாரித்தபோது இவர்கள் பணிக்கு வராத நாட்களுக்கு மேலதீக நேர கொடுப்பனவுக்காக விண்ணப்பித்தபோது அந்ந விண்ணப்பத்தினை பிராந்திய சுகாதார சேவை பணிமனை நிராகரித்தாகவும் அந்த கொடுப்பனவு உண்மையில் முறைகேடாக பெறுவதற்கு முனைந்ததாகவும் இதனை அதிகாரிகள் நிறுத்தியதினால் ஏற்பட்ட தாக்கத்தினால் இம்; மோதல் நடந்ததாக அறியமுடிகிறது. . சமமந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கேட்டுக்கொண்டனர்