பருத்தித்துறையில் மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு
இன்று பருத்தித்துறை சூரிய மஹால் மண்டபத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டார்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இந்த நிகழ்வு நடை பெற்றது. மாவீரர்களின் பெற்றோர்கள் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்கள் நிகழ்வு ஒரு வித்தியாசமான முறையில் நடைபெற்றது. மாவீரர்களின் பெற்றோர்களுடன் அவர்களுடைய சுயநலத்தை விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்கினார்கள். நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய போசனமும் வழங்கி வைக்கப்பட்டது