பட்டம் ஏற்றி சென்ற சிறுவன் கிணற்றில் வீழ்ந்து சாவு!! -பருத்தித்துறையில் சோகம்-
பருத்தித்துறை இன்பருட்டி பகுதியில் பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார்.
அதே இடத்தைச் சேர்ந்த ஜெகன் ஆனந்த் (வயது -17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் தோட்டக் கிணறில் தவறி வீழ்ந்துள்ளார். அவரை இரவு 7 மணியாகியும் காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ளனர்.
இரவு 7.30 மணியளவில் சிறுவனை கிணற்றிலிருந்து சடலமாக மீட்ட உறவினர்கள் மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.