Mon. May 13th, 2024

நேசக்கரம் அமைப்பு ஊடாக மருந்துவச் செலவுக்காக ரூபா ஒரு லட்சம் வழங்கி வைப்பு

வடமராட்சி புலோலிப் பகுதியில் மலவாசல் இன்றி தினம் பல துயரங்களுடன் வாழ்ந்து வரும் கோகுலன் கார்த்தீபன் என்ற  9 வயது சிறுவன் பிறக்கும் போது மலவாசல் இன்றி பிறந்துள்ளார்.  இந்த சிறுவனின் உயிரை காப்பாற்ற 32 தடவை சந்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது

ஆனால் இதுவரை சிகிச்சைகள் வெற்றி அளிக்கவில்லை. வயிற்றுப் பகுதி ஊடாக மலம் வெளியில் எடுக்கப்பட்டு வருகின்றது. இவரின் உயிரை பாதுகாக்க பல வைத்தியசாலைகளுக்கு பெற்றோர் அலைந்து திரிக்கின்றார்கள். கொழுப்பு மற்றும் யாழ் வைத்தியசாலைகளுக்கு மாதாந்தம் சென்று வர வேண்டிய நிலையும் உள்ளது

வறுமையில் வாடும் குடும்பத்திற்கு மகனின் மருந்துவச் செலவு மற்றும் வைத்தியசாலைக்கான போக்குவரத்து செலவுக்கு பணம் இன்றி பெரும் கஷ்டப்படுகின்றார்கள் தமக்கு உதவி செய்யுமாறு  கருணையுள்ளம். கொண்டவர்கள்  கோரியிருந்தனர் அதற்கு அமைவாக இன்று 21-08-2019 புதன்கிழமை காலை 11-00 மணியளவில் ரூபா ஒரு லட்சம் வழங்கி வைக்கப்பட்டது.
நிதி வழங்கியவர்கள் விபரம்
க-கணேசலிங்கம் 55,000 சுவிஸ்
பெ -முரளி 20,000 பிரான்ஸ்
த -யுகன் 15,000 கனடா
த -உமாசுதன் 5000 கட்டார்
என் -சிந்துஜன் 5000 இலங்கை

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்