நெல்லியடி மற்றும் பூநகரியில் ஜனாதிபதியின் பணிப்புரையின் உறுதிசெய்ய வேண்டுமென மக்கள் ஆர்ப்பாட்டம்
![](https://newsthamil.com/wp-content/uploads/2020/04/cKdP9nVZ_400x400.jpg)
ஆறுமாதங்களுக்கு கடன் அறவிடும்மேற்கொள்ளப்படாத இருப்பதை உறுதிப்படுத்துமாறுநேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று பகல் 1 30 மணி அளவில்குறித்த கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சி பூநகரி வலையபாடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாவட்ட மீனவ ஒத்துளைப்பு இயக்க இளைஞர் யுவதிகளினால் குறித்த போராட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டில் ஏற்பட்ட அச்ச அச்சுறுத்தல் நிறைந்த காலப் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு கடன் அரவிடுவது மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதியினால் நிறுத்தப்பட்டிருந்த இந்த நிலையில் தொடர்ந்தும் கடன் அறவீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அறவீடு மேற்கொள்ளாது இருப்பதை உறுதி செய்யுமாறு தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுத்து இருந்தார்கள்.இப்போராட்டம் வடமராட்சிப் பகுதியிலுள்ள கரவெட்டி நெல்லியடி பகுதிகளிலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கரவெட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரவெட்டி பகுதியிலும் கடன் அறவீடும் நிறுவனங்கள்வீடு வீடாகச் சென்று கடன் அறவிடுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள் பொதுமக்கள் கரவெட்டி பிரதேச உட்பட்ட கிராம சேவையாளர்களுக்கு முறையிட்டுள்ளார்கள் கிராமசேவையாளர் கரவெட்டி பிரதேச செயலருக்கு மக்களுடைய நிலை முறையிட்டுள்ளார்கள் செயலர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்