நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
14.08.2020 இன்று நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கரப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றது. இந்நிகழ்வு நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயதிலக தலைமையில் நடைபெற்றது. யாழ் மாவட்டத்தில் உள்ள 8 பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நான்கு விளையாட்டு கழகங்களுக்கு இடையில் இப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆவரங்கால் கரப்பந்தாட்ட கழகம் 26ஆம் தேதி காங்கேசன்துறை பொலிஸ் நிலைய மைதானத்தில் நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் பங்குபற்றவிருக்கிறது. வெற்றி பெறும்கழகங்களுக்கு பணப் பரிசும் வெற்றி கேடயங்கள் வழங்கப்படும். இன்று பங்குபற்றிய நாலு விளையாட்டுக் கழகங்களுக்கும் வெற்றி கேடயமும் சான்றிதழ்களும் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்.W.P.J. சேனாதி மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு வழங்கியதுடன் வெற்றியீட்டிய விளையாட்டுக் கழகத்துக்கு கேடயமும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கினார்கள்.
பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவை மேம்படுத்துவதற்காக இந்த சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.