Sat. May 18th, 2024

நெல்லியடி பொதுச் சந்தையில் நாளை PCR பரிசோதனை

நெல்லியடி பொதுச் சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கு நாளை (15) செவ்வாய்க்கிழமை PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமராட்சி  தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தெரிவித்துள்ளார். மருதனார்மடம் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நெல்லியடி பொதுச் சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கும் கரவெட்டி சுகாதார பிரிவினரால் இப் பரிசோதனை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சந்தையுடன் தொடர்புடைய வியாபாரிகள் அனைவரும் தாமாக முன்வந்து இந்த பரிசோதனைக்கு ஒத்துழைக்குமாறும் ஒத்துழைக்காத வர்த்தகர்கள் பொதுச் சந்தைக்கு உட்செல்வதற்கு தடை விதிக்கப்படும் எனவும் தவிசாளர் தெரிவித்துள்ளார்.  நாளை இடம்பெறவுள்ள PCR பரிசோதனையில் நெல்லியடி பொதுச் சந்தையுடன் தொடர்புடைய மரக்கறி வியாபாரிகள், மீன் விற்பனையாளர்கள், இறைச்சி விற்பனையாளர்கள், சிற்றுண்டிச்சாலை நடாத்துவோர், பொதுச் சந்தையில் பல்பொருள் வாணிபத்தில் ஈடுபடுவோர், கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள்,  சுமை தூக்கும் தொழிலாளிகள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அவர் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்