நெல்லியடி சதுரங்க கழகத்தின் பரிசளிப்பு விழா
நெல்லியடி சதுரங்க கழகம் நடாத்தும் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
NBCM பவுண்டேசன் தலைவர் எஸ்.தயாபரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் சின்னத்துரை விஜயகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண பொலீஸ் பணிப்பாளர் என்.தெய்வேந்திராஜா, நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் ஜி.கிருஷ்ணகுமார், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி வைத்தியர் கே.உமாசுதன், வடக்கு கிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் பணிப்பாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.