நெல்லியடி கொரோனா பரிசோதனை எவருக்கும் தொற்று இல்லை
நெல்லியடி பொதுச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் எவருக்கும் கொரோனா இல்லை என சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல்லியடி பொதுச் சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் 112 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எவருக்கும் கொரோனா இல்லை என முடிவு கிடைத்துள்ளது. பருத்தித்துறை மற்றும் மந்திகை பொதுச் சந்தையுடன் தொடர்புடைய 80 பேருக்குமான PCR பரிசோதனை முடிவுகள் இன்னமும் ழெளியாகவில்லை.