நெல்லியடியில் முஸ்லீம் வர்த்தகரிடையே மோதல், ஒருவர் மண்டை கிழிந்தது
இன்று நெல்லியடி நகரப்பகுதியில் அமைந்துள்ள புதிய சந்தை பகுதியில் அமைந்துள்ள புடவை வியாபாரம் செய்யும் இரு முஸ்லிம் கடை உரிமையாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு புடவைக் கடை உரிமையாளர் கம்பியினால் தாக்கப்பட்டும் கத்தியினால் கீறப்பட்டும் தலையின் பின் பக்கம் ரத்தம் வழிந்த படியும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் பருத்தித்ததுறையில்உள்ளஅரசினர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.
நெல்லியடி பொது சந்தையில் உள்ள முஸ்லிம் வியாபாரிகளிடையே ஏற்பட்ட மோதல் சம்பவமொன்றில் காயமடைந்த மூவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலீசார் தெரிவித்தனர்.
இதில் காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் றிஸ்கார் (வயது -26) முகமட் சபீர் (வயது- 29) எஸ். எம் சமீர் (வயது- 24) ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.