நெல்லியடியில் முச்சக்கர வண்டிகள் தரிப்பிடம் ஒதுக்கீடு
நெல்லியடி பகுதியில் நாளை முதல் முச்சக்கர வண்டிகளை நிறுத்தி வைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நெல்லியடி பயணிகளின் இடையூறை கருத்தில் கொண்டு நெல்லியடி பஸ் தரிப்பு நிலையத்திற்கு அண்மையில் முச்சக்கர வண்டிகள் தரிப்பிடம் நாளை திங்கட்கிழமை இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.
நெல்லியடி பஸ் தரிப்பு நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக முச்சக்கர வண்டிகள் நிறுத்தப்படுவதாக பலராலும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. இதனை கருத்தில் கொண்டே இடத்தை ஒதுக்கி குறிப்பிட்ட முச்சக்கர வண்டிகள் நிறுத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்