நாளை மறுதினம் வடக்கு- கிழக்கில் பூரண கதவடைப்பு
நாளை மறுதினம் வடக்கு – கிழக்கில் பூரண கதவடைப்பிற்கு அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இணைந்து இந்த அழைப்பை மேற்கொண்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்காலை இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தே பூரண கதவடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என தமிழ் கட்சிகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.