Wed. May 15th, 2024

நாளை செவ்வாய் முதல் அடையாள அட்டை முறைமை நடைமுறைக்கு

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அடையாள அட்டை இலக்க நடைமுறை நாளை செவ்வாய்க்கிழமையில் இருந்து அமுலுக்கு வரும் என பிரதிப் பொலீஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ தனியார், பொதுத் துறையினர், அத்தியாவசிய அல்லது பிற சேவைகளை வழங்குபவர்கள் அடையாள அட்டை (இறுதி இலக்க) நடைமுறைக்குள் அடங்கமாட்டார்கள்.
சாதாரண பொது மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் போது இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
சுயதனிமையில் இருப்போர் அல்லது ஊரடங்குள்ள பகுதிகளில் இருப்போர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த நடைமுறை நாளை மறு தினம் முதல் ஊரடங்கு தளரும் மாவட்டங்களில் அமுலாகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்