நண்பரின் வீட்டில் வைத்து விசாரணை செய்ததாக சுவிஸ் தூதரக பெண் வாக்குமூலம்
கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் கடத்தப்ட்ட உள்ளூர் பெண் ஊழியரை சி.ஐ.டி விசாரித்ததில் கடுமையான முரண்பாடுகள் உள்ளதாக சிங்கள இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது .
தூதரகம் முதலில் பெண் தாக்கப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பிரிட்ஜெட்டின் கான்வென்ட் பகுதியில் வைத்து விசாரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
இருப்பினும், ஒரு நண்பரின் வீட்டில் விசாரிக்கப்பட்டதாக கடத்தப்ட்ட பெண் சிஐடியிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
அவர் ஒரு வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டார் என்று கூறப்பட்டாலும் , அவர் ஒரு சிவப்பு காரில் வீட்டிற்கு சென்றார் என்று விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.