Fri. May 17th, 2024

தேநீர் குவளையை பரிசளித்த விளையாட்டுத்துறை அமைச்சு மலையக மக்கள் கடும் விசனம்

இலங்கைக்கு பெருமைத்தேடி தந்த பெருமகனுக்கு தேநீர் கோப்பையை வழங்கிய விளையாட்டு துறை அமைச்சுக்கு  எதிராக மலையக மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கை சார்பாக சென்று வெண்கலப்பதக்கத்தை வென்றெடுத்த மாதவன் ராஜ்குமாருக்கு தேநீர் கோப்பையை விளையாட்டு துறை அமைச்சு வழங்கியுள்ளமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தமாதம் 27,28,29 திகதிகளில் இடம்பெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் பங்கேற்ற மாதவன் ராஜ்குமார் 30 நாடுகளை எதிர்க்கொண்டு 3ம் இடத்தை தட்டிச்சென்று நவம்பர் 11ம் திகதி டுபாயில் இடம்பெறும் உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்க தகுதிப்பெற்று நாடுத்திரும்பியுள்ளார்.

நாடு திரும்பிய ராஜ்குமாருக்கு விளையாட்டு அமைச்சில் வைத்து தேநீர் கோப்பையை பரிசாக கொடுத்துள்ளமை மலையக மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மலையகத்தில் தோட்டத்தொழிலாளியின் மகனாக அவதரித்து இலங்கை நாட்டிற்கே பெருமை ஈட்டி கொடுத்த வீரனுக்கு தேனீர் கோப்பையை வழங்கியமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் ராஜ்குமாருக்கு உரிய கௌரவத்தை வழங்கி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற அரசு ஒத்துழைக்க வேண்டுமென்பதே மலையக மக்களின் வேண்டுகோளாக அமைந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்