Wed. May 15th, 2024

தேசிய மற்றும் மாகாணத்தில் சாதனை புரிந்த முல்லை வீரர்கள் கெளரவிப்பு

தேசிய மற்றும் மாகாண போட்டிகளில் சாதனை புரிந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும்  அவர்களின் பயிற்சியாளருக்கான கொளரவிப்பு நிகழ்வு நேற்று சனிக்கிழமை முல்/புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக பங்குகொண்டு தேசிய மற்றும் மாகாண மட்டத்திலான போட்டிகளில் சாதனைகள் புரிந்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் வீரர்களுக்கான கெளரவிப்பு மற்றும் அவர்களை பயிற்றுவித்த பயிற்றுனருக்கான கெளரவம் அளிக்கும் நிகழ்வு.நடைபெற்றது.
பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் S.வரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்த் அவர்களும், சிறப்பு விருந்தினராக பிரதேச செயலக கணக்காளர் க. கடம்பசோதி அவர்களும் கலந்து சிறப்பித்து சாதனையாளர்களையும் அவர்களின்  பயிற்றுனர்களையும் கெளரவமளித்தனர்.
இந்நிகழ்வில் சாதனை விளையாட்டு வீரர்கள் அவர்களின் பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்