Fri. May 17th, 2024

தேசிய மட்ட கால்பந்தாட்டம் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி சம்பியன்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட 17 வயதுப் பெண்கள் கால்பந்தாட்டடப் போட்டியில் மகாஜனக் கல்லூரி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கால்பந்தாட்ட தொடர் கொழும்பு களணிய பிரதேசசபை மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணியை எதிர்த்து பொலனறுவை பன்டிவெவ மகா வித்தியாலய அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி வீராங்கனையும் அணித் தலைவியுமான லயன்சிகாவின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பொலனறுவை பன்டிவெவ மகா வித்தியாலய அணி திணறியது. இதனால் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி வீராங்கனை லயன்சிகா அடுத்தடுத்து இரு கோல்களைப் போட தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்
இடைவேளைக்குப் பின்னரான ஆட்டத்தில் இரு அணிகளாலும் மேலதிக கோல்கள் எதனையும் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்