Thu. May 16th, 2024

தேசிய கூடைப்பந்தாட்டம் யாழ்மாவட்ட இளைஞர் அணி வரலாற்றுச் சாதனை

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினரால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட தொடரில் யாழ் மாவட்ட இளைஞர் சேவை மன்ற பெண்கள் அணி 7வது தடவையாகவும் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தனர்.

இளைஞர் சேவை மன்றக்களுக்கான 34வது தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட போட்டிகள் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நுகேகொடவில் நடைபெற்றது.
இதில் பெண்களுக்கான இறுதியாட்டத்தில் யாழ் மாவட்ட இளைஞர் அணியை எதிர்த்து கம்பஹா மாவட்ட இளைஞர் அணி மோதியது. ஆக்டத்தில் ஆதிக்கம் செலுத்திய யாழ்மாவட்ட இளைஞர் அணி 36:26 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். இதன் மூலம் 7 வது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை யாழ்மாவட்ட இளைஞர் அணி பெற்று வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்