தென்மராட்சி – மீசாலை ரயில் நிலையம் அருகே விபத்தில், மூவர் படுகாயம்
தென்மராட்சி – மீசாலை ரயில் நிலையம் அருகே இன்று (27/5) மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
சைக்கிள் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மீசாலை மேற்கு மீசாலையைச் சேர்ந்த தேவகுமார் சஞ்சுதன் வயது 11
தவசிகுளம் கொடிகாமத்தைச் சேர்ந்த அசோகலிங்கம் அஜந்தன் வயது 18 மட்டுவில் தெற்கைச் சேர்ந்த குணஈஸ்வரன் லக்சன் வயது 18 ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்