தூக்கில் தொங்கிய நிலையில் பிரதேச சபை உறுப்பினரின் சடலம் மீட்பு
சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினராக இருந்த இராமாவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜேன் (வயது-28) என்பரே உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்கள்.