துன்னாலை பகுதியில் கசிப்பு இருவர் கைது
நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரு வேறுபட்ட இடங்களில் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று துன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
துன்னாலை கிழக்கு குடவத்தை பகுதியில் 750 மில்லி லீற்றர் கசிப்பும், கோடா 10125 மில்லி லீற்றரும் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துன்னாலை பகுதியில் 750 மில்லி லீற்றர் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.