Sun. May 19th, 2024

தாஜுடீன் கொலை வழக்கில் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்

தாஜுடீன் கொலை வழக்கில் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
தாஜுடீன் கொலை வழக்கில் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி Dr ஆனந்த சமரசேகரவுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையில் , தாஜூடீன் கொலை வழக்கு விசாரணையில் சில தகவல்களை மூடி மறைத்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர் 2017 ஆம் ஆண்டில் தாஜூடீன் கொலை வழக்கில் நீதிமன்றில் சரணடைந்து பிணையில் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது
2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தல்களின் போது தாஜூடீன் கொலை வழக்கு அதிகமாக பேசப்பட்டதோடு , முஸ்லீம் வாக்குகளை பெறுவதற்காக இதனை தமது தேர்தல் வாக்குறுதிகளாக அரசியல் கடசிகள் குறிப்பிட்டன. இருந்தபோதிலும் கடந்த 4 வருடங்களில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் வழக்கு இழுத்தடிக்கப்ட்டு கொண்டிருபது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்