Fri. May 17th, 2024

தள்ளிப்போன 1000 ரூபா அதிகரிப்பு , பாராளுமன்ற தேர்தலுக்கு பிறக்காம் – ஏமாற்றப்படும் மலையக மக்கள்

உறுதியளிக்கப்பட்ட 1000 ரூபா சம்பளம் கிடைக்குமா ..மீண்டும் மீண்டும் வாக்குறுதி மட்டுமே, ஏமாற்றப்படும் மலையக மக்கள். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதியாலும் ஆறுமுகன் தொண்டமான் போன்ற மலையக தலைவர்களாலும் 1000 ரூபா சம்பளம் என்ற வாக்குறித்து அளிக்கப்பட்டது. ஜனாதிபதியானவுடன் என்று உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதி , பின்னர் ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் பொங்கலுக்கு முன்னர் என்று ஆறுமுகன் தொண்டமானால் கூறப்பட்டது.
பொங்கல் நெருங்கி வருவதால் தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் 1000 ரூபா சம்பளம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பின்னர் புதுவருடம் , மாகாணசபை தேர்தல் மற்றும் தீபாவளி என்று தள்ளிப்போகும் என்றே தெரியவருவதாக மலையக அமைப்புகள் தெரிவிக்கின்றன

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்