தமிழ் மக்களும் கோத்தபாய ராஷபக்சவிற்கு ஆதரவாம் டிலான் பெரேரா தெரிவிப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ அவர்களுக்கு சிங்கள மக்கள் மட்டுமன்றி தமிழ் மக்களும் ஆதரவு அளிப்பார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஸ வெற்றி பெற வேண்டி விசேட பூசை ஹப்புத்தளை ஸ்ரீகருவேற்காடுபதி அம்மன் ஆலயத்தில் விசேட பூசை நடைபெற்றதையடுத்து ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.