தமிழ் கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை -மஹிந்த நம்பிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பேச்சுவார்த்தைகளை எங்களுடன் நடாத்தவில்லை என்றும் விரைவில் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ,குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ஷவுடனான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் உள்ள ஷங்கிரில்லா ஹோட்டலில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்
இந்த நிலையில் தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோத்தபாய ராஜபக்சவுடன் ஏற்கனவே கலந்துரையாடியதாக நேற்று முன்தினம் தமிழ் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்தபொழுது மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பொழுது சஜித்துக்கு இனப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய அரசியல் அறிவு இல்லை என்று சுமந்திரன் கூறியதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்