தமிழர்களின் வாக்கு தமிழனுக்கே வேண்டும்!! -கோருகின்றார் அனந்தி-
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஒரு பொதுவேட்பாளர் களமிறங்க வேண்டும் என்கின்ற கருத்து மக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் மதகுருமார்களிடம் ஏற்பட்டதன் விளைவாகவே சிவாஜிலிங்கத்தை தேர்தலில் போட்டியிட வைப்பதற்கு தீர்மானித்தாக ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியளார் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழர்களும் தமிழர்களாக சிந்தித்து தங்களுடைய வாக்குகளை சிவாஜிலிங்கத்தின் மீன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மிக தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.