தனியார் மருத்துவமனைகளில் கோரோனோ சோதனைக்கு அனுமதி , கட்டணம் 6000 ரூபா மட்டுமே
கோரோனோ நோய்க்கான பரிசோதனை செய்வதற்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ் நடத்த தனியார் மருத்துவமனைகளை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது என்று சுகாதார சேவைகள் இயக்குநர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.
இதற்காக தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்படும் சோதனைக்கு 6,000 ரூபா மட்டுமே அறவிடப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.