தனது பெயரை ‘ஹர்ஜன் அலெக்சாண்டர் என்று மாற்றிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுனா மகேந்திரன்
பணமுறி மோசடி தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுனா மகேந்திரன் தனது பெயரை மாற்றியுள்ளதாக சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்பு (இன்டர்போல்) தெரிவித்துள்ளது.
அதன்படி, அவர் தனது பெயரை ‘ஹர்ஜன் அலெக்சாண்டர்’ என்று மாற்றியுள்ளார்.
இதை சட்டமா அதிபர் இன்று (16) காலை சிறப்பு உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.