Sat. May 18th, 2024

தகுதிகாண் கோலூன்றி பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவி முதலாமிடம்

இளையோருக்கான ஆசிய மெய்வல்லுநர் போட்டிக்கான இலங்கை வீராங்ககளுக்கான முதலாவது தகுதிகாண் போட்டியில் மகாஜனக் கல்லூரி மாணவி சிவபாதம் சுவர்ணா முதலாமிடத்தைப் பெற்றுள்ளார் இளையோருக்கான ஆசிய மெய்வல்லுநர் போட்டி அண்மையில் நடைபெறவுள்ளது. இதற்கான இலங்கை வீரர்களை தெரிவு செய்யும் போட்டி இன்றும், நாளையும் சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் 16 வயது பெண்கள் பிரிவில் கோலூன்றிப்பாய்தலில் 2.70 மீற்றர் பாய்ந்து முதலாமிடம் பெற்றுள்ளார்.
இவர் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிகாண் போட்டியில் 2.80 மீற்றர் அடைவுமட்டத்தை பெற்றால் இளையோர் ஆசிய மெய்வல்லுநர் போட்டிக்கான தகுதியை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்