டைமன்ஸ், ஸ்பேர்ஸ் அணிகள் இறுதியாடத்திற்குத் தகுதி
கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்களிற்கான பூப்பந்தாட்டத்தில் டைமன்ஸ் மற்றும் ஸ்பேர்ஸ் அணிகள் இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளன.
இதன் அரையிறுதியாட்டங்கள் இன்று நெல்லியடி மத்திய கல்லூரி பூப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.
1வது அரையிறுதியாட்டத்தில் டைமன்ஸ் அணியை எதிர்த்து விபுலானந்தா அணி மோதியது.
டைமன்ஸ் அணி 2:1 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றது. அடுத்து நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் ஸ்பேர்ஸ் அணியை எதிர்த்து கலைமகள் அணி மோதியது. இதில் ஸ்பேர்ஸ் அணி 2:1 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றது. இதன் இறுதியாட்டம் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.