Wed. May 15th, 2024

ஞாயிற்றுக்கிழமை முதல் திருநெல்வேலி சந்தை திறப்பு

திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைத்தொகுதிகள் யாவும் நாளை மறுதினம் 11/04/2020 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் வழமைபோல் ஆரம்பிக்கப்படவுள்ளது என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அறிய தருவதுடன் கட்டாயமாக PCR பரிசோதனை செய்யப்பட்டு முடிவுச் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டும் தமது வியாபாரத்தை மேற்கொள்ளலாம் என்பதனை அனைத்து வியாபாரிகளுக்கும் அறியத்தருகின்றேன். ஒவ்வொரு வியாபார உரிமையாளர்களுடன் உதவிக்கு நிற்பவர்களும் கட்டாயமாக பரிசோதனை சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமானது. அத்துடன் PCR பரிசோதனை செய்யாதவர்கள் தத்தமது பிரதேசத்திற்கு உரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பெற்றுக்கொள்ளலாம் என்பதனை தெரியப்படுத்துவதுடன். நல்லூர் பிரதேசத்துக்கு உட்பட்டவர்கள் PCR பரிசோதனை செய்யத் தவறியவர்கள் எதிர்வரும் 12/04/2021 திங்கட்கிழமை நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 9:00 மணி அளவில் PCR பரிசோதனை மேற்கொள்ளலாம் என்பதனையும் அறியத்தருகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்