Tue. May 14th, 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு!!

தேர்தலில் வாக்களிப்பதை விட வேறு எந்த அரசியல் நடவடிக்கையிலும் பாதுகாப்பு உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் ஈடுபட உரிமை இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுமு.

தற்பொழுது கட்மையில் ஈடுப்பட்டுள்ள அல்லது ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சீருடையுடன் தங்களுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதனையும், அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தற்பொழுது சேவையில் ஈடுப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு இது தண்டனைக்குறிய குற்றமாக அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்