Tue. May 21st, 2024

சொந்தக்காரர்களே ஆனாலும் யாரையும் விடாதீர்கள். தொடாதீர்கள். அணுகாதீர்கள். ஆபத்தான வாரத்தில் உள்ளோம்

உணவுப் பொருட்கள் வாங்ககூட வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். இனிமேல்தான் மிக மோசமான நிகழ்வு நடக்க உள்ளது. INCUBATION காலம் என்று சொல்லபடும் வளரும் காலம் வந்தே விட்டது. நோய் இனிமேல்தான் வெளிப்படும். நோய் தாக்கப்பட்டவர்கள் வெளியே வரும் போது மற்றவர்களுக்கும் அது பரவும். ஆகையினால் வீட்டில் தனித்திருப்பது மிக மிக அவசியம். இதுதான் மிக அவசியமான காலகட்டம்.
மார்ச் 23 லிருந்து ஏப்ரல் 3 வரை இந்த கிருமி தாக்குதல் உச்சத்திலிருப்பதால் நோயுற்றவர்கள் மூலம் மற்றவர்களுக்கு அதிகம் பரவலாம். நாம் மிக மிக கட்டுபாட்டுடன் வீட்டில் இருந்தால் அடுத்த இரண்டு வாரங்களில் நோய் பரவல் கட்டுபடுத்த பட்டு, அதற்கடுத்த இரண்டு வாரங்களில் நோயின் தாக்கம் குறையும்.
இத்தாலியில் இந்த காலகட்டத்தில்தான், நோய் தோற்றும் காலகட்டத்தில்தான் அவர்கள் மிகுந்த அலட்சியத்துடன் இருந்தார்கள். அதனால்தான் மிக பெரிய தாக்கம் நடந்துள்ளது.
நாம் அதிக பட்ச நோய் தொற்றின் காலத்தில் உள்ளோம்.
யாரையும் வீட்டின் உள்ளே விடாதீர்கள். யார் வீட்டுக்கும் போகாதீர்கள். சொந்தக்காரர்களே ஆனாலும் யாரையும் விடாதீர்கள். தொடாதீர்கள். அணுகாதீர்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்