சுரேஷ் ஈஸ்வரிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பு
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக கடந்த 2017 மூன்றாம் மாதம் 8 ஆம் திகதியிலிருந்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைனைத் தடுப்பதற்கும் அவரை அச்சுறுத்தி இவ்வாறான நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தாமல் கட்டுப்படுத்துவதற்குமே இவ்விசரணை அழைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனத் தெனிவிக்கப்படுகிறது.