Thu. May 16th, 2024

சுன்னாகத்தில் சட்டவிரோத மது விற்பனை ஒருவர் கைது

சுன்னாகப் பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை மதுபானப் போத்தல்களுடன் சுன்னாகம் பொலீஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சுன்னாகம் கந்தரோடை பகுதியில் ஒருவர் பயணத்தடை பயன்படுத்தி சட்டவிரோதமாக  மதுபானத்தை அதிக விலைக்கு விற்கப்படுவதாக சுன்னாகம் பொலீஸார் தகவல் வழங்கப்பட்டது.  இதனையடுத்து குறித்த பகுதியில் நடைபெற்ற தேடுதலின் போது குறிப்பிட்டளவு லீற்றர் கொண்ட 63 மதுசாரப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் 30 வயதுடைய ஒருவரையும கைது செய்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்