சிறுவர் உதைபந்தாட்ட அக்கடமி திறப்பு விழா
உதைபந்தாட்ட சிறுவர் உதைபந்தாட்ட அக்கடமி திறப்பு விழா நாளை 30.01.2021 ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டு கழக மைதானத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
மன்னார் இலுப்பைக்கடவை மகா வித்தியாலய ஆசிரியர் கு.பிரசன்னா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், சிறப்பு விருந்தினர்களாக இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் உப தலைவர் இ.ஆனோல்ட், வலிகாமம் உதைபந்தாட்ட லீக் தலைவர் இ.யுவராஜ், கெளரவ விருந்தினர்களாக வடமாகாண உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப. தர்மகுமாரன், மூத்த உதைபந்தாட்ட வீரர் வை.தர்மகுலநாதன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.